Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரபல இயக்குனர் என்னை அடித்துக் கொடுமைப்படுத்தினார்: இளம் ஹீரோ குற்றச்சாட்டு
மும்பை: இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார்.
ரன்பிர் கபூர் நடிக்க வரும் முன்பு உதவி இயக்குனராக பணியாற்றினார். தனது தந்தை ரிஷி கபூர் ஐஸ்வர்யா ராயை வைத்து இயக்கிய படம் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் பிளாக் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
அதன் பிறகே பன்சாலியின் சாவரியா படம் மூலம் ஹீரோவானார். இந்நிலையில் அவர் பன்சாலி பற்றி கூறுகையில்,
அடி, உதை
நான் பிளாக் படத்தில் உதவி இயக்குனராக இருந்தபோது பன்சாலி என்னை முழங்கால் போட வைத்தார். அவர் என்னை அடித்து உதைத்தார். ஒரு கட்டத்தில் அவரின் கொடுமைகளை தாங்க முடியாமல் படத்தை விட்டு வெளியேறினேன்.
ரன்பிர்
நான் 10 முதல் 11 மாதங்கள் அவரிடம் பணியாற்றினேன். அதன் பிறகு என்னால் முடியவில்லை. எல்லாம் அளவுக்கு மீறி நடக்கிறது. இனியும் அவரின் கொடுமையை தாங்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.
பன்சாலி
பன்சாலி என்னை அடித்து கொடுமைப்படுத்தியிருக்கலாம். ஆனால் இன்று நான் வெளிப்படுத்தும் நடிப்பு எல்லாம் அவரிடம் கற்றுக் கொண்டது தான். அவர் நடிப்பு பற்றி அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் என்றார் ரன்பிர்.
ஏ தில் ஹை முஷ்கில்
அடுத்தடுத்து தனது படங்கள் தோல்வி அடைந்ததால் கவலையில் இருந்த ரன்பிருக்கு ஏ தில் ஹை முஷ்கில் படம் ஹிட்டாகியுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.