Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
முஸ்லீம்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தியதாக நடிகர் சல்மான் கான் மீது வழக்கு
மும்பை: முஸ்லீம்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சல்மான் கானுக்கும் சர்ச்சைக்கும் ஏழாம் பொருத்தம் தான். அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். அது குறித்து கேட்டால் ஒன்று மவுனம் காப்பார் இல்லை என்றால் கோபத்தில் பொறிந்து தள்ளிவிடுவார்.
இந்நிலையில் தான் அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
ஃபேஷன் ஷோ
சல்மான் பீயிங் ஹ்யூமன் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். அந்த அமைப்பு சார்பில் அண்மையில் மும்பையில் ஃபேஷன் ஷோ நடைபெற்றது.
டி-சர்ட்
அந்த ஃபேஷன் ஷோவில் மாடல் ஒருவர் அரபு மொழியில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் அணிந்து ராம்ப் வாக் செய்தார்.
புகார்
பீயிங் ஹ்யூமன் ஃபேஷன் ஷோவை பார்த்த மும்பையைச் சேர்ந்த முகமது ஆசிம் முகமது ஆரிப் என்பவர் சல்மான் கான் மீது போலீசில் புகார் கொடுத்தார்.
மத நம்பிக்கை
ஆரிப் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, சல்மான் கானின் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ராம்ப் வாக் செய்த மாடலின் டி-சர்ட்டில் அரபு மொழியில் எழுதிய வாசகங்கள் இருந்தன. இது முஸ்லீம் சமுதாயத்தினரின் மத நம்பிக்கையை காயப்படுத்துவதாக உள்ளது. அதனால் சல்மான் கான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.
வழக்கு
ஆரிபின் புகாரின்பேரில் போலீசார் சல்மான் கான் மீது முஸ்லீம்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தியதாக இந்திய தண்டனை சட்டம் 295 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.