Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘கண்மணி அன்போடு’... சிறைக்குள் கவிஞராக மாறிய சஞ்சய் தத்... விரைவில் புத்தகமாக ரிலீஸ்!
மும்பை: சிறைக்குள் இருந்த காலத்தில் 500 கவிதைகள் எழுதியுள்ளாராம் சஞ்சய் தத். விரைவில் அவற்றைத் தொகுத்து புத்தகமாக அவர் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கடந்தவாரம் ரிலீசானார். நன்னடத்தைக் காரணமாக தண்டனைக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே அவர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்த சஞ்சய் தத், சிறைக்குள் பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார். இடையில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் கவிதைகளும் எழுதி வந்துள்ளார்.
500 கவிதைகள்...
சிறையில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள், பழக்கமான மனிதர்கள் இவர்களை வைத்து கவிதைகள் இயற்றியுள்ளாராம் சஞ்சய் தத். கிட்டத்தட்ட 500 கவிதைகள் அவர் சிறைக்குள் எழுதி இருக்கிறார்.
சிறை அனுபவம்...
விரைவில் அவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட சஞ்சய் தத் திட்டமிட்டுள்ளார். இதில் அவரது சிறை அனுபவமும் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
புதிய பட வாய்ப்புகள்...
உடனடியாக இந்தப் பணிகளை ஆரம்பிக்காமல் சிறிது காலம் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்க திட்டமிட்டுள்ளார் சஞ்சய் தத். இதற்கிடையே புதிய பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வருகின்றன.
ஓய்வு நேரத்தில்...
இதனால் தனது ஓய்வு நேரங்களில் புத்தகம் எழுதுவதற்கான பணிகளை அவர் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கவிஞர்...
எத்தனையோ தலைவர்களை, கவிஞர்களை, எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமைக்கு உரியது சிறைச்சாலைகள். தற்போது அந்தப் பட்டியலில் சஞ்சய் தத்தும் சேர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.