இனிமே ஒன்லி ஹீரோ.. நட்புக்காக மட்டுமே காமெடி!- சந்தானம் புது முடிவு
இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்றும், நெருங்கிய நண்பர்களின் படங்களில் மட்டுமே காமெடி பண்ணுவது என்றும் நடிகர் சந்தானம் முடிவெடுத்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் இன்றைக்கு முதல் நிலை காமெடியனாக உள்ளவர் சந்தானம். ஆனால் இவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டதால், காமெடி பண்ணுவதைக் குறைத்து வருகிறார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களுக்குப் பிறகு இனிமே இப்படித்தான் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ள சந்தானம், நெருங்கிய நண்பர்களான உதயநிதி, ஆர்யா போன்றவர்கள் கேட்டால் மட்டும் நகைச்சுவை வேடங்களில் நடிப்பது என முடிவு செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











