Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பாதுகாவலருடன் மோதல் வழக்கு: ஷாருக்கான் வயிற்றில் பாலை வார்த்த மும்பை போலீஸ்
மும்பை: 2012ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் பாதுகாவலருடன் மோதிய வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது ஷாருக்கான் அரங்கத்தின் பாதுகாவலருடன் மோதினார்.
அன்றைய போட்டியில் அவரின் கொல்கத்தா அணி வென்ற பிறகு அவருடைய குழந்தைகள் மற்றும் நண்பர்கள் மைதானத்திற்குள் வந்தனர். இதை பார்த்த பாதுகாவலர் விகாஸ் தால்வி அவர்களை வெளியே செல்லுமாறு கூறினார். உடனே ஷாருக்கான் கோபம் அடைந்து அவருடன் சண்டைக்கு பாய்ந்தார்.
இதையடுத்து ஷாருக்கான் வாங்கடே ஸ்டேடியத்திற்குள் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இதற்கிடையே இது குறித்து உள்ளூர் ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கூறியிருப்பதாவது, விசாரணையில் தன் மீது சுமதப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஷாருக்கான் மறுத்துள்ளார். வாரண்ட் இல்லாமல் கைது செய்யும் அளவுக்கு அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி ஷாருக்கான் வயிற்றில் பாலை வார்த்துள்ளனர் போலீசார்.