Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகர் சங்கத் தேர்தலில் என் ஆதரவு சரத்குமார் அணிக்குதான்!- சிம்பு அதிரடி
நடிகர் சங்கத் தேர்தலில் என் ஆதரவு சரத்குமார், ராதாரவி அணிக்குத்தான் என்று அறிவித்துள்ளார் நடிகர் சிம்பு.
நடிகர் சங்கத் தேர்தல் வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடக்கவிருக்கிறது. பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள இந்தத் தேர்தலில் இப்போது பதவியில் உள்ள சரத்குமார் அணி போட்டியிடுகிறது.
இவர்களுக்கு எதிராக விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் அடங்கிய புதிய அணி களமிறங்கியுள்ளது. சரத்குமார் அணிக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் செய்துவரும் இவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்டோரைப் பார்த்து ஆதரவு கேட்டு வருகின்றனர். விரைவில் முதல்வர் ஜெயலலிதாவையும் பார்க்கப் போகிறார்களாம்.
இந்த நிலையில் நேற்று வாலு பட வெற்றி சந்திப்பில் நடிகர் சிம்புவிடம் நடிகர் சங்கத் தேர்தலில் அவரது ஆதரவு யாருக்கு என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிம்பு, "நான் விஜய்காந்த் தலைவராக இருந்தபோதிலிருந்து உறுப்பினராக இருக்கிறேன். இப்பொழுது நடக்கும் தேர்தலில் எந்த அணிக்கு ஆதரவு என்று ஏதும் கிடையாது. சரத்குமாருக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. அவர்கள் தான் நடிகர் சங்கத்திற்காக அவ்வளவு உழைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் விஷால், விஷ்ணு, கார்த்தி ஆகியோர் எனக்கு எதிரிகள் அல்ல. அவர்களும் என்னுடைய நல்ல நண்பர்கள். இப்போதும் பேசிக் கொண்டு இருக்கிறோம். தேர்தல் வரைதான் அணிகள். தேர்தலுக்குப் பிறகு அணிகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்..," என்றார்.