Don't Miss!
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ட்விட்டரிலிருந்து விலகினார் சிம்பு!
ட்விட்டரிலிருந்து விலகிக் கொள்வதாக நடிகர் சிம்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வாலு திரைப்படம் பெரும் இழுத்தடிப்புக்குப் பிறகு வெளியாகி, சிம்புவை மீண்டும் மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்தது.
இனி ஆண்டுக்கு இரண்டு படங்களாவது வெளியிடுவது உறுதி என சிம்புவும் கற்பூரம் அடிக்காத குறையாக மேடைகளில் கூறி வருகிறார். அதற்கேற்ப இப்போது இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வருகிறாராம்.
தமிழ் நடிகர்களில் ட்விட்டரில் பிஸியாக இருந்தவர்களில் சிம்புவும் ஒருவர். எஸ் டி ஆர் என்ற பெயரில் அவர் ட்வீட்கள் போட்டு வந்தார்.
ஆனால் இனிமேல் ட்விட்டரில் தொடரப் போவதில்லை என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:
'இதுவரை என் ரசிகர்களும், என் நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி. இன்று முதல் எனது ட்விட்டர் எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வாகிக்கப்படும் . தேவைப்பட்டால் மட்டுமே நான் என் கருத்தை பதிப்பேன். ஒரு நடிகனாக என்னுடைய கடமை என் ரசிகனுக்கு நல்ல தரமான படம் கொடுக்க வேண்டும் என்பது தான். அவர்களுடனான என்னுடைய தொடர்ந்து வெற்றிப் படங்கள் தருவதில்தானே தவிர, இதைப் போன்ற சமூக வலைத் தளங்களில் இல்லை என்பதையும் நான் உணர்ந்துக் கொண்டேன். என்னுடைய இந்த முடிவை என் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை," என்று கூறியுள்ளார்.