Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்துவதா? - சிம்பு வேதனை!
சென்னை: தமிழகத்தின் கலாச்சாரப் அடையாளமாக, வீர விளையாட்டாகப் பார்க்கப்படும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு வேதனைத் தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையான இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த திடீரென 2014-ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளும் ஜல்லிக்கட்டு நடக்காததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகத்தில் நடைபெறவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடந்தே தீர வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் இந்தத் தடையை அனுமதிக்க முடியாது என்று அறிக்கை வெளியிட்டார் நடிகர் சிம்பு.
அடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தாக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகர் சிம்பு கூறுகையில், "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டு வேதனையடைந்தேன். ஒரு தமிழ்ச் சகோதரனாக அவர்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன். இதற்கு மேலும் என்னால் சும்மா இருக்கமுடியாது. அவர்கள் தங்கள் நிறத்தை வெளிப்படுத்திவிட்டார்கள். இப்போது தமிழர்களான நாம் நம்முடைய ஒற்றுமையையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தவேண்டும். உண்மையான தமிழர்களால் என்ன செய்யமுடியும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்," என்றார்.