Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
3 காதலைத் தாண்டி வந்து விட்டேன் என்பதையே நம்ப முடியவில்லை... சிம்பு
சென்னை: நான் காதலிப்பதே வேடிக்கை தான். அதில் நான் 3 காதலை தாண்டி வந்துவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. ஒரு காலத்தில் ரஜினி ஆக ஆசைப்பட்டேன். தற்போது அந்த ஆசை இல்லை என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அவரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதனால் மனிதர் சந்தோஷத்தில் உள்ளார்.
இந்நிலையில் அவர் முன்னணி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் காதல் பற்றி கூறுகையில்,
நயன், ஹன்சிகா
காதல் முறிந்துவிட்டதே என்று அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. இதை உணர்ந்ததால் தான் என்னால் தற்போதும் ஹன்சிகா, நயன்தாராவுடன் நடிக்க முடிகிறது.
காதல்
தற்போது காதல் ஒரு பிளஸ் மற்றும் ஒரு மைனஸ் ஆக உள்ளது. முன்பெல்லாம் காதல் தோல்வி அடைந்தால் அந்த பெண்ணை பழிவாங்கத் துடித்தோம். தற்போது அந்த எண்ணம் இல்லாமல் அடுத்த வேலையை கவனிக்கச் செல்வது பிளஸ். ஆனால் பலர் இஷ்டத்திற்கு ஜாலியாக காதலிக்கிறார்கள். அதை காதல் என்று வேறு தவறாக நினைப்பது தான் மைனஸ்.
காதல் வேடிக்கை
நான் காதலிப்பதே வேடிக்கை தான். என்னை போன்றவன் காதலிக்க முடியாது. அப்படி இருந்தும் நான் 3 காதலை தாண்டி வந்துவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.
காதல் தோல்வி
காதலில் தோல்வி ஏற்பட்டால் உடனே அழக் கூடாது. நடந்தது நன்மைக்கே என்று நினைத்து வாழ்க்கையைத் தொடர வேண்டும்.
2015ல் திருமணம்
நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? நான் ஒன்றும் திருமணத்திற்கு எதிரானவன் கிடையாது. நல்ல புரிதல் உள்ள ஆணும், பெண்ணும் செய்து கொள்வது தான் திருமணம். தற்போது விவாகரத்தும் அதிகரித்துவிட்டது. சூழ்நிலைக்கேற்ப என்னையே மாற்றிக் கொள்வேன். யாரோ ஒரு பெண்ணை பார்த்து, பேசி, திருமணம் செய்து கொள்ள முடியாது. சாகும் வரை இவளிடம் தோற்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு உள்ள பெண் கிடைத்த பிறகே திருமணம்.
ரஜினி
ஒரு காலத்தில் ரஜினி சார் போன்று ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. தற்போது அது இல்லை என்றார் சிம்பு.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!