Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாணவர்கள் தங்களின் படிப்பறிவை இந்த சமுதாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும் - கார்த்தி
சென்னை: மாணவர்கள் தங்களின் படிப்பறிவை இந்த சமுதாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார்.
சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 37 வது ஆண்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவக்குமார், கார்த்தி, சூர்யா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிவக்குமார் அறகட்டளை சார்பில் 10,௦௦௦ ரூபாய் வழங்கப்பட்டது.
37 வது ஆண்டுவிழா
+ 2 வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியரைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கு பண உதவி செய்வதை சிவக்குமார் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சிவக்குமார் அறக்கட்டளையின் 37 வது ஆண்டுவிழா நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கார்த்தி, சிவக்குமார், சூர்யா என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சிவக்குமார்
37 ஆண்டுகளாக இதனை நடத்தி வரும் நடிகர் சிவக்குமார் ''ஏழைக் குழந்தைகள் படிப்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நன்றாகப் படிக்கக் கூடிய குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். மாணவர்கள் தங்கள் கவனம் சிதறாமல் தொடர்ந்து படிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
சூர்யா
நடிகர் சூர்யா பேசும்போது ''ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை இந்த சமுதாயத்துக்கு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.குறிப்பாக ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு விளக்கு கொண்டு இன்னொரு விளக்கை ஏற்றும் முயற்சி தான் நாம் செய்யும் நல்ல காரியமும்'' என்று கூறினார்.
கார்த்தி
''நல்ல செயல்களை செய் என்று அறிவுரை கூறாமல் எப்படி செய்வது என எங்கள் கண் முன்னால் எங்கள் பெற்றோர்கள் செய்து காட்டினார்கள்.இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் படிப்பை சமுதாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்'' என்றார்.