Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விளக்குமாறும், கையுமாக ஆவடியை சுத்தம் செய்ய கிளம்பிய சூர்யா
சென்னை: எஸ். 3 படப்பிடிப்பில் இருந்து கிடைத்த பிரேக்கில் நடிகர் சூர்யா சென்னை ஆவடியில் குப்பையை அள்ளி பொது இடங்களை சுத்தம் செய்துள்ளார்.
சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்.3.ல் நடித்துக் கொண்டிருக்கிறார். எஸ்.3. தீபாவளிக்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கடந்த 2 மாதங்களாக ஷூட்டிங்கில் பிசியாக இருந்த சூர்யாவுக்கு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் ஹாயாக வீட்டில் அமர்ந்து பீட்சா, பர்கர் சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்க்கவில்லை. மாறாக விளக்குமாறும், கையுமாக சென்னை ஆவடி பகுதியில் குப்பையை அள்ளி சுத்தம் செய்துள்ளார்.
தான் சுத்தம் செய்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஆவடி பகுதியை சுத்தமாக்கி பசுமையானதாக ஆக்க அவர் துவங்கிய பசுமை ஆவடி திட்டத்தின் கீழ் அவர் சுத்தம் செய்துள்ளார்.
மேலும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து பல்வேறு பகுதிகளை தேர்வு செய்து சுத்தம் செய்து வருகிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் சூர்யா.