Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பாகுபலி 2 வில் சூர்யா?
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமௌலியின் சரித்திரப் படமான பாகுபலி 2 வில், நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
உலகளவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களில் பாகுபலி 2 படத்திற்கும் ஒரு இடமுண்டு. பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பை விரைவில் படக்குழுவினர் தொடங்கவிருக்கின்றனர்.
பாகுபலி முதல் பாகத்தை விட இந்தப் பாகத்தில் ஆக்க்ஷனும், செண்டிமெண்டும் அதிகம் இருக்கும் என்று ஏற்கனவே நடிகர் ராணா தெரிவித்து இருக்கிறார்.
பாகுபலியை விட பாகுபலி 2 படத்தில் பிரமாண்டம் அதிகம் இருக்கும் என்று ராணாவின் கருத்தை இயக்குநர் ராஜமௌலியும் அங்கீகரித்துள்ளார்.
இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஏற்கனவே உங்களது படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று சூர்யா முன்னதாக ஒரு விழாவில் ராஜமௌலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
சூர்யாவின் கோரிக்கை குறித்து அப்போது எதுவும் சொல்லாத ராஜமௌலி இந்தப் பாகத்தில் அவரின் ஆசையை நிறைவேற்றப் போகிறார் என்று கூறுகின்றனர்.
2 வது பாகத்தில் பிரமாண்டம் கருதி நிறைய ஹிந்தி மற்றும் தமிழ் நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்ட ராஜமௌலி, இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஒரு சிறிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை வழங்கி இருக்கிறாராம்.
இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என்று டோலிவுட்டிலிருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்திருக்கும் சூர்யா பாகுபலி 2 வில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது எதனால் என்று கேட்டால், இந்தப் படத்தின் நடிப்பதன் மூலம் உலகளவில் அங்கீகாரம் பெறலாம் என்ற ஆசையினால் தானாம்.
சூர்யா தற்போது விக்ரம் குமாரின் 24 திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்தப் படம் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.