Don't Miss!
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுந்தர்.சி பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!
சென்னை: தற்போது எஸ் 3 தவிர வேறு எந்தப் படத்திலும் சூர்யா ஒப்பந்தமாகவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
24 படத்தைத் தொடர்ந்து எஸ் 3 படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இது சூர்யா ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்திருக்கிறது.
ஆனால் இப்படம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை காத்திருக்குமாறு சூர்யா சார்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்த செய்திகள் எதையும் நம்ப வேண்டாம். ஒரு படம் முடிவாவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன, அதுவரை காத்திருங்கள் என்று கூறியுள்ளனர்.
இதுவரை எதுவும் உறுதியாகவில்லை என்றாலும் அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருக்குமாறு கூறியதால், சூர்யா இப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதுதவிர சென்னை 28 படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்று கூறி அப்படம் பற்றிய வதந்திகளுக்கு, படக்குழு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.