Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூர்யா முன்னிலையில் இன்று பிரமாண்டமாக வெளியாகிறது பாகுபலி தமிழ் டிரைலர்!
சென்னை: சர்வதேச அளவில் பாராட்டுகளைக் குவித்து வரும் பாகுபலி படத்தின் தமிழ் டிரைலர் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்து கொள்கிறார்.
பாகுபலி தெலுங்கு டிரைலர் மூன்று தினங்களுக்கு முன் வெளியானது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொள்வார் முதலில் கூறப்பட்டது. ஆனால் எந்த சிறப்பு விருந்தினரும் இல்லாமலேயே படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானது.
இதுவரை இந்த டிரைலரை சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். செலுங்குப் பட உலகைப் பொருத்தவரை இது புதிய சாதனை. தமிழில் ஏற்கெனவே ஐ, கோச்சடையான், லிங்கா ட்ரைலர்கள் இந்த எண்ணிக்கையைக் கடந்து பார்க்கப்பட்டவை.
பாகுபலி டிரைலரை பார்த்து ரசித்த நடிகர் சூர்யா மற்றும் ஆர்யா, இந்தி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரன் ஜோஹர் ஆகியோர், வெகுவாகப் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தனர்.
இன்று பாகுபலியின் தமிழ் டிரைலர் வெளியீடு மாலை 6.30 மணியளவில் சென்னை ஹயாத் ஹோட்டலில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த அனுஷ்கா, நாசர், சத்யராஜ், தமன்னா மற்றும் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சூர்யா முன்னிலையில் ட்ரைலர் வெளியிடப்படுகிறது.
தெலுங்கு டிரைலரின் வெற்றியால் தமிழ் டிரைலரையும் பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்து இந்த விழாவை இன்று நடத்துகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தமிழில் பாகுபலி படத்தை சூர்யாவின் சகோதரர் கே.ஈ.ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக வாங்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.