Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'கபாலி' ரஞ்சித் இயக்கத்தில் 'பாக்ஸராக' நடிக்கும் சூர்யா?
சென்னை: 'கபாலி' ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா பாக்ஸராக நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களைத் தொடர்ந்து ரஜினியின் கபாலியை இயக்கிய ரஞ்சித் அடுத்ததாக சூர்யாவை இயக்கவிருக்கிறார். 'மெட்ராஸ்' படத்துக்குப் பின் சூர்யாவை இயக்கவிருந்த ரஞ்சித்திற்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததால், சூர்யாவிடம் சொல்லிவிட்டு கபாலியை இயக்க சென்றார்.
தற்போது 'கபாலி' வெளியாகி விட்டது. தொடர்ந்து சூர்யாவை இயக்கவிருக்கிறார். சூர்யா நடித்து வரும் 'எஸ் 3' படத்துக்குப் பின் ரஞ்சித் படத்தில் அவர் நடிப்பார் எனத் தெரிகிறது.
'எஸ் 3' படத்தில் போலீசாக நடித்து வரும் சூர்யா அடுத்ததாக பாக்ஸர் வேடத்தில் நடிக்கப் போகிறாராம். இதற்காக தனது உடல் எடையை சூர்யா அதிகரிக்கப் போவதாக கூறப்படுகிறது.
வட சென்னை பகுதிகளில் வாழும் பாக்ஸர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை ரஞ்சித் எழுதியிருக்கிறாராம். இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
இதுவரை சூர்யா எந்தப் படத்திலும் பாக்ஸராக நடித்ததில்லை என்பதால் இப்படம் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
சூர்யா படத்துக்குப் பின் மீண்டும் கார்த்தியை ரஞ்சித் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.