twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தபால் துறை ஏற்பாடு: ரஜினிக்கு இ போஸ்டில் குவிந்த வாழ்த்துகள்!

    By Shankar
    |

    நேற்று டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்திருந்த இ போஸ்ட் மூலம் மட்டுமே பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் குவிந்தன.

    ரஜினியின் பிறந்த நாளை உலகமே நேற்று கொண்டாடியது. நாட்டின் பிரதமர் தொடங்கி, சாமானிய ரசிகன் வரை அவரை அனைவருமே வாழ்த்தி மகிழ்ந்தனர். உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் இணையதளங்கள் வாயிலாகவும் வாழ்த்தினர்.

    Thousands of fans sent birthday wishes through e posts to Rajinikanth

    ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற இ போஸ்ட் முறையை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியது. நேற்று சென்னை அபிராமபுரம், கோபாலபுரம் தபால் நிலையங்களில் இபோஸ்ட் மூலம் பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் ரஜினிக்குக் குவிந்தன. இதனை அஞ்சல் துறை ஊழியர்கள் ரஜினி வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

    இதுகுறித்து சென்னை மண்டல தபால் துறை அலுவலர் மெர்வின் அலெக்சாண்டர் கூறுகையில், " பொது மக்களைக் கவர அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில்

    ஒன்று இ போஸ்ட். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற விரும்புவோருக்காக இந்த சேவையை அறிமுகப்படுத்தினோம். பெரிய வெற்றி பெற்றுள்ளது," என்றார்.

    English summary
    Thousands of fans and well wishers of Superstar Rajini have sent their birthday wishes through e posts to Rajinikanth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X