Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தபால் துறை ஏற்பாடு: ரஜினிக்கு இ போஸ்டில் குவிந்த வாழ்த்துகள்!
நேற்று டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்திருந்த இ போஸ்ட் மூலம் மட்டுமே பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் குவிந்தன.
ரஜினியின் பிறந்த நாளை உலகமே நேற்று கொண்டாடியது. நாட்டின் பிரதமர் தொடங்கி, சாமானிய ரசிகன் வரை அவரை அனைவருமே வாழ்த்தி மகிழ்ந்தனர். உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் இணையதளங்கள் வாயிலாகவும் வாழ்த்தினர்.
ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற இ போஸ்ட் முறையை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியது. நேற்று சென்னை அபிராமபுரம், கோபாலபுரம் தபால் நிலையங்களில் இபோஸ்ட் மூலம் பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் ரஜினிக்குக் குவிந்தன. இதனை அஞ்சல் துறை ஊழியர்கள் ரஜினி வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
இதுகுறித்து சென்னை மண்டல தபால் துறை அலுவலர் மெர்வின் அலெக்சாண்டர் கூறுகையில், " பொது மக்களைக் கவர அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில்
ஒன்று இ போஸ்ட். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற விரும்புவோருக்காக இந்த சேவையை அறிமுகப்படுத்தினோம். பெரிய வெற்றி பெற்றுள்ளது," என்றார்.