Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் அரசியல்..? ஆள விடுங்கப்பு! - வடிவேலு
மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, ஆளை விடுங்கப்பு என்று பதில் கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.
விஷாலின் ‘கத்தி சண்டை' என்ற புதிய படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வடிவேலு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் காமெடியனாக நடிக்கிறார்,
இந்தப் படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற வடிவேலுவிடம், தேர்தல் காலமாயிற்றே அரசியலில் ஆர்வம் காட்டவில்லையா என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், "ஏன்... எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு... எதுக்கு இப்போ அரசியல்? ஆளை விடுங்கப்பு," என்றார்.
மீண்டும் காமெடி வேடத்துக்கு திரும்பியது குறித்துப் பேசுகையில், "நான் கதாநாயகனாகவும் நடிப்பேன். நகைச்சுவை வேடங்களிலும் நடிப்பேன். இனிமேல் இரண்டு வழிப்பாதை தான். நிறைய படங்களில், படம் முழுக்க வருகிற மாதிரி நகைச்சுவை வேடங்களில் நடிக்க இருக்கிறேன்.
இந்த படத்தின் இயக்குநர் சுராஜ், எனக்கு தகுந்த மாதிரி நடிப்பதற்கு தீனி போடுவார். அதனால் நம்பிக்கையுடன் நடிக்கிறேன். படம் நிச்சயமாக வெற்றி பெறும்,'' என்றார்.
அப்பாடி... காமெடி பஞ்சம் ஒரு வழியா தீரப் போகுது!