Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மாமியாராக நடிக்க மறுத்த வைஜெயந்திமாலா-ரஜினி
ரஜினியின் மனைவி லதா ரஜினி நடத்தும் ஆஷ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.
விழாவில் நடிகை சௌகார் ஜானகி, கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர்.எம்.பாலமுரளிகிருஷ்ணா, சித்ராலயா கோபு ஆகியோருக்கு பீஷ்ம விருதுகளும், இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மற்றும் வைஜயந்தி மாலா ஆகியோருக்கு ஆகியோருக்கு வாழ்நாள் நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன. விருதுகளை ரஜினிகாந்த் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய தேவ் ஆனந்த், "ரஜினி உயர்ந்த குணங்களுடன் உயர்ந்த இடத்தில் இருக்கும் றுபத கலைஞர். அவருடனான நட்பு எனக்குப் பெருமை அளிக்கிறது. மிக நல்ல முன்மாதிரியாகத் திகழும் மனிதர் அவர்" என்றார்.
நடிகை சௌகார் ஜானகி பேசுகையில், "எம்ஜிஆர், சிவாஜி போன்ற மேதைகளுடன் நடித்த நாட்கள் என் நினைவுக்கு வருகின்றன. ரஜினிகாந்த் என்ற நல்ல மனிதருக்கு தாயாக நான் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்" என்றார்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:
நான் மதிக்கும் கலைஞர்களில் மிக முக்கியமானவர் தேவ் ஆனந்த். அவரது இந்த இளமையின் ரகசியம்தான் தெரியவில்லை. உற்சாகத்தின் உருவம் அவர்.
இந்த இடத்தில் வைஜெயந்திமாலா பாலி பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். மிகச் சிறந்த நடிகை அவர்.
மாப்பிள்ளை படத்தில் எனக்கு மாமியாராக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் வைஜெயந்தி மாலாதான். அதற்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நண்பர் சிரஞ்சீவி ஒரு பெரும் தொகையை வைஜெயந்திமாலாவுக்கு கொடுக்க முன்வந்தார்.
ஆனால் வைஜெயந்திமாலா நடிக்க மறுத்துவிட்டார். 'உங்களுக்கு எதிராக நடிக்க என்னால் முடியாது. உங்களுடன் நான் மோதுவது போன்ற காட்சிக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன்' என்றார்.
இப்படிப்பட்ட உயர்ந்த கலைஞர்களைச் சிறப்பிப்பதில் எனக்குப் பெருமை" என்றார்.
லதா ரஜினிகாந்த் வரவேற்றுப் பேசினார். திரையுலகப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.