Don't Miss!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- News விரல் நகத்தை வச்சே.. உங்களுக்குள் மறைந்து இருக்கும் கேரக்டரை கண்டுபிடிச்சிடலாம்.. ரெடியா?
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அடுத்தடுத்த படங்களில் வரிசை கட்டி பாடும் "தளபதி"
சென்னை: புலி படத்தில் நடிகை சுருதியுடன் இணைந்து ஒரு பாடலைப் பாடியிருந்த நடிகர் விஜய், தற்போது அடுத்ததாக தான் நடித்து வரும் விஜய் 59 படத்தில் 2 பாடல்களைப் பாடி இருக்கிறாராம்.
ஆரம்பத்தில் விஜய் நடித்த படங்களில் அவரது பாடல்களும் தவறாமல் இடம்பெற்றன, காலப்போக்கில் தான் நடிக்கும் படங்களில் பாடுவதை விஜய் குறைத்துக் கொண்டார்.
ஆனால் 3 வருடங்களுக்கு முன் துப்பாக்கி படத்தில் ஒரு பாடலைப் பாடிய விஜய் துப்பாக்கி முதல் புலி வரை தான் நடிக்கும், ஒவ்வொரு படங்களிலும் ஒரு பாடலையாவது பாடி வருகிறார்.
விஜய் பாடிய பாடல்கள் தொடர்ந்து ஹிட்டடிப்பதால் விஜயின் படங்களில் தவறாமல் விஜய்க்கும் ஒரு பாடலை படக்குழுவினர் ஒதுக்கி விடுகின்றனர்.
புலியைத் தொடர்ந்து விஜய் அடுத்தபடியாக இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் 2 பாடல்களை ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து வரும் இந்தப் படத்தில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்று கூறுகின்றனர், இசையமைப்பாளர் தேவா ஒரு லோக்கல் கானா பாடலைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வளர்ந்து வரும் விஜய் 59 திரைப்படம், 2016 ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.