Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
சலீம் படத்தின் அடுத்த பாகம்... விஜய் ஆண்டனி அறிவிப்பு
சமீபத்தில் வெளியான சலீம் படத்தின் தொடர்ச்சியை விரைவில் தயாரித்து நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த ‘சலீம்' படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் நாயகியாக அக்ஷா பர்தசானி, நடித்துள்ளார். நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் அவர் முதலில் நடித்த நான் படத்தின் இரண்டாம் பாகம். சலீம் ஆகிய நான் என்றுதான் தலைப்பே வைத்திருந்தார்.
இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராயநகரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி கேக் வெட்டினார். தயாரிப்பாளர்கள் பாத்திமா, சுரேஷ், சரவணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
பின்னர் விஜய் ஆண்டனி நிருபர்களிடம் கூறுகையில், "நான்' படத்தின் 2-ம் பாகமாக ‘சலீம்' வந்துள்ளது. சமூக அவலங்களை வெளிப்படுத்தும் வகையில், விறுவிறுப்பான படமாக கொடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
முதலில் 240 தியேட்டர்களில் திரையிட்டோம். இப்போது 300 தியேட்டர்களாக உயர்ந்தள்ளது.
படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து என் நடிப்பில் வெளியாகும் படம் ‘இந்தியா - பாகிஸ்தான்'. ‘நான்' படத்தின் 3-ம் பாகத்தை எடுத்து அடுத்த ஆண்டு வெளியிடுவேன்," என்றார்.