Don't Miss!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் சேரும் 'தெறி' கூட்டணி: ஆனால்...
சென்னை: தெறி படத்தை அடுத்து விஜய், அட்லீ மீண்டும் கூட்டணி சேர்வது உறுதியாகிவிட்டது.
விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் செல்வராகவனிடமும் கதை கேட்டுள்ளார். செல்வாவின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.
விஜய் அட்லீ, செல்வா ஆகிய இருவரின் இயக்கத்திலும் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் பைரவாவை அடுத்து யார் இயக்கத்தில் முதலில் நடிக்க உள்ளார் என்பது மட்டுமே இன்னும் முடிவாகவில்லை.
இந்நிலையில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை அட்லீ இயக்க விஜய் நடிக்கிறாராம். ஆனால் இது விஜய்யின் 61வது படமா அல்லது 62வது படமா என்பது தான் தெரியவில்லை.
முன்னதாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமான சங்கமித்ராவில் நடிக்க விஜய்யிடம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் சங்கமித்ராவை சுந்தர் சி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.