Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனி எங்கப்பா படத்தை போட்டு கிங்மேக்கர்னெல்லாம் எழுதக்கூடாது.. புரிஞ்சுதா?- விஜய்
சென்னை: நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்கும் மோதல் முற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் விளைவாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை தன் நீலாங்கரை வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்திய விஜய், இனி மன்றம் குறித்து தன் தந்தை எஸ்ஏசியிடம் யாரும் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்று கறாராகக் கூறிவிட்டாராம்.
கஷ்டப்பட்டு சினிமாவில் பெரிய இடத்தைப் பெற்றுள்ள விஜய்யை அரசியலில் பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்பது அவர் தந்தை எஸ் ஏ சியின் கனவு.
அதற்காக மெல்ல மெல்ல காய் நகர்த்தி வந்த அவருக்கு பெரும் அடியாக விழுந்தது தலைவா விவகாரத்தில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு.
அரசியல் பற்றிய பேச்சை எடுப்பதையே தவிர்க்க ஆரம்பித்துள்ளார் விஜய்.
தலைவாவுக்குப் பிறகு விஜய்யின் சினிமா மற்றும் ரசிகர் மன்ற நடிவடிக்கைகள் அனைத்திலும் ஒதுங்கியே நிற்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.
இந்த நிலையில் சமீபத்தில் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனது நீலாங்கரை இல்லத்துக்கு அழைத்த விஜய், 'இனி மன்றத்தின் பேனர்கள், போஸ்டர்களில் எஸ்ஏசி பெயரை, படத்தைப் போடக்கூடாது.. குறிப்பாக கிங்மேக்கர் என்றெல்லாம் எழுதக்கூடாது' என்று உத்தரவிட்டுள்ளாராம்.
வழக்கமாக இதுபோன்ற கூட்டங்கள், விஜய்யின் வடபழனி கல்யாண மண்டபத்தில்தான் நடக்கும். ஆனால் இனி அங்கு யாரும் போக வேண்டாம்... நீலாங்கரை வீட்டுக்கே வந்துவிடுங்கள் என்று விஜய் கூறிவிட்டாராம்.
தந்தையும் மகனும் இப்படி மோதிக் கொள்ளக் காரணம் என்று மன்றத்தின் செயலாளரான புஸ்ஸி ஆனந்தைக் குறிப்பிடுகிறார்கள். இவர் புதுவை மாநில புஸ்ஸி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ.
அவரோ, இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையுமே விஜய்தான் எடுத்தார். ஒருவேளை அவர் தன் தந்தையுடன் கலந்து பேசிக்கூட இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம், என்கிறார் ஒரேயடியாக!