Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இந்தப் படம் எந்தப் பிரச்சினையுமில்லாம வெளி வரணும்- இயக்குநருக்கு விஜய் சொன்ன அட்வைஸ்
தனது ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வதும், அதிலிருந்து படத்தை மீட்டு ரிலீஸ் பண்ணுவதற்குள் ஏற்படும் குழப்பங்களும் விஜய்யை இந்த முறை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கின்றன.
குறிப்பாக கதைத் திருட்டுப் புகார். இதற்கு முன் தனது வேறு எந்த படத்துக்கும் வராத புகார் கத்திக்கு வந்துவிட்டதால், அடுத்தடுத்த படக் கதைகளில் கவனமாக இருக்க முடிவு செய்துள்ளார்.
அடுத்து அவர் நடிப்பது சிம்பு தேவன் படத்தில். இந்தப் படத்தின் கதை முழுக்க முழுக்க கற்பனையானது. லார்டு ஆப் த ரிங்ஸ் படத்தைப் போல அதி உச்ச கற்பனையாக இந்தக்கதை புனையப்பட்டுள்ளதாம்.
கதையைக் கேட்டதுமே, இது எந்தப் படத்தின் பாதிப்பும் இல்லாத கதைதானே என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட விஜய், இந்தப் படம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்று இயக்குநர் சிம்பு தேவனிடம் கூறினாராம்.
இன்னமும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங் நாளை மறுநாள் தொடங்குகிறது. விஜய்யுடன் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், கிச்சா சுதீப் நடிக்கின்றனர்.