Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திருநெல்வேலிக்கு விஜய் சொன்ன விளக்கம்
திருநெல்வேலி: திருநெல்வேலி என்ற பெயர் ஏன் வந்தது என விளக்கம் கூறினார் நடிகர் விஜய்.
நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த கத்தி படத்தின் 50 நாள் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் விஜய்.
கத்தி படம் திருநெல்வேலியைச் சேர்ந்த தன்னூத்து என்ற கிராமத்தை மையமாக வைத்து எடுத்திருந்தனர். விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
எனவே படத்தின் 50 நாள் விழாவை நெல்லையில் நடந்தினர்.
விழாவில் பங்கேற்ற விஜய், திருநெல்வேலி என்ற பெயருக்கான அர்த்தத்தைச் சொன்னார். அவர் பேசுகையில், "ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று. ஊரின் பெயரிலேயே மூன்றும் அமைந்திருப்பது திருநெல்வேலியின் சிறப்பு.
அதாவது "திரு' என்றால் மரியாதை, 'நெல்' என்றால் உணவு, "வேலி' என்றால் பாதுகாப்பு. நெல்லையப்பர் அருள்பாலிக்கும் இந்த ஊரின் சிறப்பை இனிக்கச் செய்யும் "அல்வா' தனிச் சிறப்பு.
விவசாயத்துக்குப் பெயர்பெற்ற இந்த ஊரில், கத்தி திரைப்படத்தின் வெற்றி விழா நடப்பது பொருத்தமானது.
வெற்றி-தோல்வி இடையே மிகவும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. கடமையைச் சரியாகச் செய்தால் வெற்றி. கடமைக்காகச் செய்தால் தோல்வி," என்றார்.