Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மனச நோகடிக்காதீங்க - ரசிகர்களிடம் விஜய் சேதுபதி வேண்டுகோள்!
இயக்குனர் லிங்குசாமி அஞ்சான் ரிலீஸுக்கு முன்பாக கொடுத்த ஒரு பேட்டியை வைத்து அவரை அளவுக்கு அதிகமாக கிண்டலடித்து வருகின்றனர் சமூக இணையதளங்களில்.
மிகுந்த நம்பிக்கையுடன் அவர் அந்த பேட்டியில் பேசியிருப்பதைப் பார்த்து ஃபேஸ்புக்கில் அவரை கிண்டல் செய்தனர். ஃபேஸ்புக்கில் தொடர்ந்து இயங்கிவரும் விஜய்சேதுபதி இதைக்கண்டு ஆதங்கப்பட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், "அனைவருக்கும் வணக்கம்,
இங்கு வெளியாகும் எல்லா திரைபடங்களும் முழு அர்பணிப்பு உணர்வுடன் எடுக்கப்பட்டு, நிச்சியமாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன்தான் வெளியடப்படுகிறது. அப்படி வெளிவரும் திரைப்படங்களின் நிறை குறைகளை அலச எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.
ஆனால் திரைப்படக் கலைஞர்களின் மனம் புண்படும்படியான தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதாக இருக்கும். நன்றி,
-இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.