Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மாறுவேடமிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்ற 'புலி' விஜய்
விருதுநகர்: புலி பட ரிலீஸுக்கு முன்பு இளைய தளபதி விஜய் மாறுவேடமிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் அக்டோபர் மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்போதே புலி படம் பற்றி பேசி அதை ட்விட்டரில் தொடர்ந்து டிரெண்டாக்கவிட்டு வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.
இந்நிலையில் படம் வெற்றி பெற வேண்டி விஜய் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். கோவிலுக்கு அவர் மாறுவேடமிட்டு சென்றுள்ளார். தலையில் பெரிய தொப்பி போட்டு முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளார்.
அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் அவர் பிரார்த்தனை செய்கையில் சிலர் அவரை அடையாளம் கண்டுவிட்டார்களாம். இதை உணர்ந்த விஜய் தயவு செய்து இதை யாரிடமும் கூறிவிடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொண்டாராம்.
தனது படங்கள் ரிலீஸாகும் முன்பு விஜய் வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றுள்ளார். ஒரு வேளை அடுத்தபடியாக வேளாங்கண்ணி செல்வார் போன்று.