Don't Miss!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- News டிரெய்லர் முடிஞ்சது! ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்டின் திருமணம் எங்கே நடக்கிறது? வெளியான தகவல்
- Finance இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் புளூ காலர் வேலைகள்..!!
- Lifestyle இன்று அனுமன் ஜெயந்தி 2024.. இந்த மந்திரத்தை ஜபித்தால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்..!
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அடுத்த ஆட்டத்திற்குத் தயாரான விஜயகாந்த் மகன்
சென்னை: சகாப்தம் படத்தைத் தொடர்ந்து 2 வது படத்திற்கான கதைத் தேர்வில் தற்போது மும்முரமாக இறங்கி இருக்கிறார் விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன்.
சண்முகப் பாண்டியன் நாயகனாக அறிமுகமான சகாப்தம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறத் தவறியது. தொடர்ந்து வேறு படங்கள் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அமைதி காத்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சண்முகப் பாண்டியன் நடிக்கப் போகும் படத்திற்கான கதை விவாதத்தில் கேப்டன் குடும்பத்தினர் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.
இப்படம் அநேகமாக ஒரு வரலாற்றுப் படமாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் விஜயகாந்த் தனது மகனை அடுத்ததாக வரலாற்று படத்தில் பார்க்கவே விரும்புகிறாராம்.
தற்போது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் கதைகளை கேட்டு வருவதாகவும் இவர்கள் கதையை இறுதி செய்து விஜயகாந்திடம் தெரிவிப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.
இந்த வருட இறுதிக்குள் கதையை இறுதி செய்து அடுத்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.