Don't Miss!
- Lifestyle புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- News வறட்சியை நோக்கி வேகமாக நகரும் பெங்களூர்.. தினமும் 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை! ஷாக் தகவல்
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
தமிழர்கள் சோம்பேறிகள், டாஸ்மாக் முன்பு நிற்பவர்களா?: விஷாலை மிரட்டியவர்கள் மீது புகார்
சென்னை: தமிழர்களை அவதூறாக பேசியதாக இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை பார்த்து தனக்கு போன் செய்து திட்டியவர்கள் மீது நடிகர் விஷால் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தமிழர்கள் சோம்பேறிகள், அவர்கள் டாஸ்மாக் கடைகள் முன்பு தான் லைன் கட்டி நிற்பார்கள் என்று நடிகர் விஷால் தெரிவித்ததாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதை பார்த்த சிலர் விஷாலுக்கு போன் செய்து திட்டியுள்ளனர், மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து விஷால் தரப்பில் நடிகர் ஹரிகிருஷ்ணன் சென்னை போலீசில் மிரட்டல் போன் பற்றி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,
விஷால் தமிழர்களை அவதூறாக பேசவில்லை. அவர் அவதூறாக பேசியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. விஷால் தமிழர்களை உயர்வாக கருதுபவர்.
மூன்று எண்களில் இருந்து விஷாலுக்கு போன் வந்தது. அவர்கள் விஷாலை திட்டியதுடன் மிரட்டினர். அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விஷாலின் பெயரை கெடுக்கவே இப்படியொரு போலி செய்தி வெளியாகியுள்ளது. வதந்தி பரப்பியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.