Don't Miss!
- Finance IPL வந்தாச்சு.. கல்லாகட்ட துவங்கிய முகேஷ் அம்பானி.. ஸ்பாட்லைட் திட்டம் தெரியுமா உங்களுக்கு..?!
- News இப்பவும் நாமதான் ‘டாப்’ல இருக்கணும்.. தோழமை கட்சிக்காக டார்கெட் வைத்து களத்தில் இறங்கிய ஐ.பெரியசாமி!
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இருளர் சமுதாய மாணவர்களின் கல்விக்கு உதவிய விஷால்!
எப்போதும் மாணவ, மாணவியரின் கல்விக்கு உதவுவதில் முதல் ஆளாக நிற்பவர் நடிகர் விஷால். எந்தப் பொறுப்பிலும் இல்லாத காலத்திலேயே கல்விக்காக உதவி செய்தவர், இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் ஆன பிறகு மேலும் நிறைய மாணவர்களுக்கு உதவி வருகிறார்.
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மிகச் சிறந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இடம் வாங்கி தந்து அவர்களுடைய படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டு தன்னுடைய தேவி அறக்கட்டளையின் மூலம் அவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் விஷால்.
தற்போது கல்வியில் பின்தங்கிய சமுதாயமான இருளர் சமூதாயத்தில் இருந்து 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளுள் ஒன்றான லயோலா கல்லூரியில் இடம் வாங்கி தந்து அவர்களின் கல்விக்கு உதவியுள்ளார் விஷால்.
இருளர் சமுதாய மாணவர்களின் கல்விக்கு உதவிய விஷால்! https://t.co/ncMOc0pSiM #Vishal pic.twitter.com/1Zo41fRYMi
— Oneindia Tamil (@thatsTamil) June 26, 2017
இந்த ஆண்டு மட்டும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு லயோலா கல்லூரியில் விஷால் இடங்கள் வாங்கித் தந்துள்ளார்.
ஒரு முதல் நிலைக் கல்லூரியில் இருளர் சமூக மாணவர்களுக்கு இத்தனை இடங்கள் பெற்றுத் தருவது இதுவே முதல் முறை.