Don't Miss!
- News ஆம்பளையா பொறந்ததுல ஒரே அட்வான்டேஜ்.. அடிக்கிற வெயிலுக்கு பனியன், டவுசரோட சுத்தலாம்!
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியது ஏன்? விஷால் விளக்கம்
ஆம்பள படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டிய வேலைகளில் பிஸியாக இருப்பதாலேயே நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து தான் விலகிக் கொண்டதாக நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
நடிப்பு, தயாரிப்பு, இசை வெளியீடு என ஏக பிஸியாக உள்ளார் விஷால்.
இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், படங்களில் பிசியாக இருப்பதால், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விஷால் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.
இதுகுறித்து, இத்தாலியில் படப்பிடிப்பில் இருக்கும் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு சினிமாவில் நடிப்பதுதான் முதலில் முக்கியம். ஆம்பள படம் பொங்கலுக்கு வெளிவர தயாராக உள்ளது. இதற்கான வேலைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். ஆகையால், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் இருந்து நான் விலகுகிறேன்," என்று கூறியுள்ளார்.
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் தமிழ் நடிகர்கள் அணிக்கு கேப்டனாக இருந்தார் விஷால். இப்போது ஆண்டுக்கு இரு படங்கள் என்று ரசிகர்களுக்கு தான் அளித்த வாக்கைக் காப்பாற்றும் வகையில் படங்களைத் தருவதில் மும்முரம் காட்டுகிறார்.