Don't Miss!
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இனி நோ பர்த்டே பார்ட்டி... குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம்! - விஷாலின் புதுமுடிவு
இனி பிறந்த நாள் விழா விருந்துகளில் பங்கேற்கப் போவதில்லை. மலர்க்கொத்து போன்ற அன்பளிப்புகளை வாங்குவது கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கப் போகிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாயும் புலி விரைவில் வெளியாகிறது. அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் நடிகர் சங்க விவகாரத்தைக் கையிலெடுத்து பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.
படப்பிடிப்பு, நடிகர் சங்க வேலைகளில் தீவிரமாக இருந்தாலும், தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் கல்விக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார்.
நாளை பிறந்த நாள் கொண்டாடும் விஷால், இந்த ஆண்டு புதிய முடிவை எடுத்துள்ளார். இந்த பிறந்த நாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடுகிறார். அதேபோல, இனி பிறந்த நாள் விருந்துகளிலும் கலந்துக் கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறாராம்.
பள்ளி குழந்தைகளின் கல்வி குறித்து இனி அதிக அக்கறை காட்டப் போகிறாராம்.
இனி மாலை, பொக்கே போன்றவற்றை வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி சாதனங்களை வாங்கித் தரப் போகிறாராம்.