Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மகள் கல்விச் செலவை ஏற்றார் விஷால்!
சென்னை:சமீபத்தில் விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகள் கல்விச் செலவை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, குடிபோதையில் கார் ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஒரு ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த திருத்தணியைச் சேர்ந்த ஓட்டுநர் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்த சட்டக் கல்லூரி மாணவர் விகாஸ் (22), அவரது உறவினர் சரண் (24) ஆகியோர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகளின் கல்விச் செலவை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டுள்ளார். 'மறைந்த ஆறுமுகத்தின் மகள் மனீஷா (வயது 7) கல்விச் செலவை தன்னுடைய தேவி அறக்கட்டளை பொறுப்பேற்கும்' என விஷால் அறிவித்துள்ளார்.