Don't Miss!
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நடிகர் விவேக் ஓபராய் சாமி தரிசனம்
திருப்பதி: பாலிவுட் நடிகர் விவேக்ஓபராய் தனது குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மகனின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார்.
பாலிவுட் நடிகர் விவேக்ஓபராய் ஏழுமலையான தரிசிப்பதற்காக குடும்பத்துடன் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். சாமி தரிசனம் செய்த அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், என்னுடைய மகனுக்கு தலைமுடி காணிக்கை செலுத்துவதற்காக நான் குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு வந்தேன் என்றார்.
நடிகர் விவேக்ஓபராயை பார்ப்பதற்காக கோவில் வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் விவேக்ஓபராய்க்கு கை கொடுத்து வாழ்த்து சொல்ல முயன்றனர்.
அப்போது தேவஸ்தான பாதுகாப்புத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.