Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இத்தனை வருடங்களாக தயாரிப்பாளர் சங்கம் எங்கே போனது?..கோபம் காட்டும் உதயநிதி
சென்னை: 'தெறி' பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்ற ரசிகரின் கருத்துக்கு, உதயநிதி ஸ்டாலின் கோபத்துடன் பதிலளித்திருக்கிறார்.
'தெறி' படம் செங்கல்பட்டு தியேட்டர்களில் வெளியாகாத விவகாரம் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதனால் 'தெறி' படத்திற்கு ஆதரவு கொடுத்த 11 தியேட்டர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு கொடுக்கப்படும், என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய 'மனிதன்' திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்கு முத்துராஜ் என்னும் ரசிகர் "சார் இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உதயநிதியிடம் கூறினார்.
பதிலுக்கு உதயநிதி "கடந்த 5 வருடங்களாக என்னுடைய படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை. அப்போது இந்த தயாரிப்பாளர் சங்கம் எங்கே போனது? என்று கோபமாக பதிலளித்துள்ளார்.
உதயநிதியின் பதிலானது கோலிவுட்டில் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.