Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஓட்டு இயந்திரம் முன் அப்படி என்னதான் யோசித்திருப்பார் விஜய்?
சென்னை: பொதுவாக வாக்களிக்கும் எந்திரத்துக்கு முன் வந்துவிட்டால், சட்டுபுட்டென்று வாக்கைச் செலுத்திவிட்டு நடையைக் கட்டுவது பிரபலங்களின் வாடிக்கை.
நடிகர் விஜய்யும் அதற்கு விலக்கல்ல. ஆனால் இந்த முறை வாக்களிக்கும் இயந்திரத்துக்கு முன் வந்ததும் அவர் உடனே வாக்களித்துவிடவில்லை.
காலை 10.45 மணிக்கு வாக்குச் சாவடிக்கு வந்த அவர், விரலில் மை வைத்துக் கொண்டு வாக்களிக்கும் இயந்திரம் முன் போனதும், யாரையும் திரும்பிப் பார்க்காமல், சற்று நேரம் யோசித்துக் கொண்டே நின்றார்.
சில நிமிட யோசனைக்குப் பிறகு அவர் தனது வாக்கைச் செலுத்தினார். அப்படி என்ன யோசித்திருப்பார் விஜய்? என்று அங்கிருந்த மீடியாக்காரர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.
கடந்த தேர்தலின்போது அதிமுகவுக்கு பகிரங்க ஆதரவு தந்தவர் விஜய். அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பிரச்சாரமே செய்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஆளும் கட்சியுடன் அவருக்கு சுமூக உறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.