Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விவேக்கை காப்பியடித்துப் பேசினேன்! - சிவகார்த்திகேயன்
மான் கராத்தே படத்தில் வரும் வசனம் ஒன்றை விவேக்கை காப்பியடித்துதான் நான் பேசினேன் என்றார் சிவகார்த்திகேயன்.
நேற்று நடந்த பாலக்காட்டு மாதவன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றுப் பேசியதாவது:
"விவேக் சாருக்கு நான் பள்ளி பருவத்திலிருந்து பரம ரசிகன். அவர் படம் பார்த்து வளர்ந்தவன் நான். அவரது காமெடிக் காட்சிகளை ஒன்று விடாமல் வீட்டில் போட்டுப் பார்ப்பேன். விவாதம் எல்லாம் வரும். அப்போது அவர் ஒரு காட்சியிலாவது கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறாரா இல்லையே என்பேன்.
அவரது பாதிப்பு நிச்சயம் எனக்குள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. அந்த அளவுக்கு என்னைப் பாதித்தவர் அவர்.
அவரது சீர்திருத்தக் கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. அவரைப் போலவே எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் மூட நம்பிக்கை இல்லை.
கல்லூரிக் காலங்களில் மாணவிகள் அவரை ஒரு கதாநாயகன் போலப் பார்ப்பார்கள். அவர் மீது அவ்வளவு அபிமானம் வைத்து இருப்பார்கள். 'குஷி' படத்தில் அவர் ஓபனிங் காட்சியில் வந்த போது கைதட்டினார்கள். திருச்சி ராஜா கலையரங்கத்தில் 1350 பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அப்போது அதில் நானும் ஒருவன்.
எப்படியும் என் காமெடிக் காட்சிகளில் அவரது பாதிப்பு நிச்சயம் இருக்கும். உள்ளுக்குள் அதுதானே இருக்கிறது. மான் கராத்தே' படத்தில் வரும் அந்த 'ரத்தி அக்னி ஹோத்ரி' டின் பீர் வசனம் எல்லாம் பாராட்டப்படுகிறது. ஆனால் அது எப்போதோ அவர் பேசியதை நான் காப்பியடித்ததுதான். அவர் விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.