Don't Miss!
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகை அபினிதா காதலனுடன் சென்று விட்டார் - கடத்தல் பரபரப்புக்கு போலீஸ் முற்றுப்புள்ளி
சென்னை: நடிகை அபினிதா கடத்தப்படவில்லை. விருப்பப்பட்டு காதலனுடன் சென்றிருந்தவர் தற்போது வீடு திரும்பி விட்டார் என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கற்பவை கற்றபின் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் அபினிதா. இது தவிர 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் பழனியப்பா நகர் கோதாவரி தெருவில் வசித்து வரும் அபினிதா, கடத்தப்பட்டு விட்டதாக நேற்று தகவல் பரவியது. வாட்ஸ் அப்பிலும் அபினிதா புகைப்படத்துடன் கடத்தப்பட்டு விட்டதாக செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் அபினிதா கடத்தப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது :-
புகார்...
கடத்தப்பட்டதாக கூறப்படும் நடிகையின் தாய் கற்பகம், சில நாட்களுக்கு முன்னர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் வந்து புகார் செய்தார். அதில், தனது மகள் நடிகை அபினிதாவை காணவில்லை என்று கூறியிருந்தார்.
காதலனுடன் ஓட்டம்...
இதுபற்றி நாங்கள் விசாரணை நடத்தி அபினிதாவை தேடினோம். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தனது காதலனுடன் ஓடியிருப்பது தெரியவந்தது.
2 நாட்களுக்குப் பின்...
அபினிதாவின் தாய் புகார் கொடுத்து 2 நாட்கள் கழித்த பின்னர், தனது காதலன் மகேசுடன் அவராகவே போலீஸ் நிலையத்துக்கு வந்துவிட்டார்.
காதல் திருமணம்...
என்னை காணவில்லை என்று எனது தாய் புகார் செய்திருப்பதாக அறிந்தேன். நான் எனது காதலனை திருமணம் செய்து கொண்டு பட்டுக்கோட்டையில் இருக்கிறேன் என்று அபினிதா எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
தவறான தகவல்...
அவரை யாரும் கடத்த வில்லை. அது போன்ற ஒரு தகவலை யாரோ பரப்பி விட்டுள்ளனர்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். போலீசாரின் உரிய விளக்கத்திற்குப் பின்னர் நடிகை கடத்தப்பட்டதாக நிலவிய பரபரப்பு முடிவிற்கு வந்தது.