Don't Miss!
- News போரூர் பக்கம் போறீங்களா? அப்போ உங்களுக்கு நல்ல செய்தி.. வந்தது சூப்பர் வசதி!
- Finance லிங்கிடுன்-ல் 'open to work' பேட்ஜை பயன்படுத்தாதீங்க! ஹெச்ஆர் அதிகாரிகள் எச்சரிக்கை..!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முன் ஜாமீன் கேட்டு நடிகை அல்போன்சா மனு!
தன் கணவரை மீட்டுத் தரக் கோரி பெண் ஒருவர் கொடுத்த புகாரில், முன் ஜாமீன் கோரி நடிகை அல்போன்சா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த சுமித்ரா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், ஜெய்சங்கர் என்பவருடன் 2013-ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு எனது கணவர் பல நாள்கள் வீட்டுக்கு வராமல் இருந்தார். ஒரே ஒரு நாள் மட்டுமே என்னுடன் வாழ்ந்தார்.
இதற்கிடையில், முகநூலில் தன் மனைவி அல்போன்சா என்று கூறி படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். எனவே, என் கணவரை அல்போன்சாவிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்," என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தப் புகார் குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனக் கருதி தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என நடிகை அல்போன்சா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.