Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது நடிகை சார்மியிடம் வாலிபர் செய்த வேலைய பாருங்க..!
ஹைதராபாத்: நடிகை சார்மியின் இடுப்பை பிடித்து சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்துள்ளது.
சிசிஎல் எனப்படும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி, தெலுங்கு வாரியர்ஸ் அணியிடம் தோற்றது.
இதையடுத்து, நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை சார்மி சென்றிருந்தார். அங்கு 18 வயதுடைய ரசிகர் ஒருவர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சார்மியும் சம்மதிக்கவே, பக்கத்தில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த வாலிபர். அப்போது திடீரென சார்மியின் இடுப்பை வளைத்து பிடித்துள்ளார். போஸ் கொடுக்கவே அப்படி செய்கிறார் என்று சார்மியும் சும்மா இருந்துள்ளார். ஆனால் இடுப்பை கிள்ளி, தடவி சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார் அந்த வாலிபர்.
இதனால் கடும் கோபம் அடைந்த சார்மி, அலறியடித்தபடி அந்த ரசிகரை பிடித்து தள்ளியுள்ளார். சார்மியின் அலறலை கேட்டு விருந்தில் கலந்து கொண்ட சிலர், அந்த ரசிகருக்கு தர்மஅடி கொடுத்து விரட்டி அடித்தனர்.
இது குறித்து சார்மி கூறுகையில், "எனது பாதுகாவலர்கள் அந்த நபரை அடிக்கும்போதும், அவர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருங்க விட மாட்டேன்" என்றார்.