Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கல்லீரல் பாதிப்பு: நடிகை டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி
சிங்கப்பூர்: கல்லீரல் பாதிப்பு காரணமாக நடிகை டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரை உலகில் கவர்ச்சி நடனம் ஆடி வந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. மறைந்த நடிகர் சி.எல். ஆனந்தனின் மகளான அவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார், நடனம் ஆடியுள்ளார். 1996ம் ஆண்டில் அவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிரபுதேவா இயக்கிய ராம்போ ராஜ்குமார் படத்தில் கடந்த ஆண்டு நடிக்கையில் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீஹரி மரணம் அடைந்தார். அவரது மரணத்தால் டிஸ்கோ சாந்தி பேரதிர்ச்சி அடைந்தார்.
டிஸ்கோ சாந்திக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை அவரது சகோதரியும் நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியுமான லலிதாகுமாரி கவனித்து வருகிறார்.