Don't Miss!
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கிரெடிட் கார்டு மூலம் ரூ. 6 லட்சம் மோசடி
மும்பை: பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கிரெடிட் கார்டை க்ளோன் செய்து ரூ.6 லட்சம் பணம் ஏடிஎம் மையத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நர்கிஸ் ஃபக்ரி மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் நர்கிஸின் கிரெடிட் கார்டை யாரோ க்ளோன் செய்து அதன் மூலம் கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் ரூ. 6 லட்சம் பணம் எடுத்துள்ளனர்.
இந்த பண பரிவர்த்தனை நடந்தபோது நர்கிஸ் மும்பையில் இருந்தார். பணம் எடுக்கப்பட்ட விபரம் அறிந்த உடன் அவர் கடந்த திங்கட்கிழமை இரவு இது குறித்து மும்பை ஜுஹு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நர்கிஸ் சம்பந்தப்பட்ட வங்கிக்கு போன் செய்து தனது கிரெடிட் கார்டை பிளாக் செய்துவிட்டார்.
4 மணிநேரத்தில் 14 முறை பண பரிவர்த்தனை நடந்தும் வங்கி ஏன் அதை கண்டுகொள்ளவில்லை என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.