Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகை சரண்யா மோகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது
திருவனந்தபுரம்: நடிகை சரண்யா மோகனுக்கு கேரளாவில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்த கேரளாவை சேர்ந்த நடிகை சரண்யா மோகன். இவர் நடிப்பு, நடனம், பாடகி என பன்முகத் தன்மை கொண்டவர்.
இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக காதலுக்கு மரியாதை படத்தில் அறிமுகமானார். பிறகு இவர் நடித்து வெளிவந்த யாரடி நீ மோகினி, அழகர்சாமி, வேலாயுதம், வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்கள் நடித்து புகழ் பெற்றார்.
இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சரண்யா மோகன்அரவிந்த் கிருஷ்ணன் திருமணம் ஆலப்புழாவில் நடந்தது. இனிமேல் நான் நடிக்கமாட்டேன். நடனப்பள்ளி தொடங்கி நடத்துவேன் என்று அவர் கூறினார். அதன்படி நடிக்கவில்லை. இந்நிலையில் கேரளாவில் இவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.