Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
நடிகைகளுக்கு சில கட்டாயங்கள் உள்ளன! - ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயாவின் கடைசி தமிழ்ப் படம் ரவுத்திரம். அதன் பிறகு ராஜபாட்டையில் ஒரு குத்தாட்டத்துக்கு ஆட்டம் போட்டார்.
ஆனால் தான் மிகவும் பிஸியாக இருப்பதாகவே கூறி வருகிறார். ஆங்கிலம், இந்திப் படங்களில் நடிப்பதாகவும், தமிழில் கிராமத்துப் பெண் வேடம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறிவருகிறார்.
லைப் ஈஸ் பியூட்டிபுல் என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கும் அவர், தனது அடுத்த படம் குறித்து கூறுகையில், "நல்ல வாய்ப்புகள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது தமிழில் படங்கள் இல்லை என்பது உண்மைதான். அதேநேரம் நல்ல வாய்ப்புகள் வராததால், பல படங்களை நான் வேண்டாம் என கூறிவிட்டது பலருக்கு தெரியாது.
சிவாஜிக்குப் பிறகு, ஜெயிக்குமோ தோற்குமா என்றெல்லாம் யோசிக்காமல் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நடித்த சில படங்கள் தோற்றதற்கு காரணம் இதுதான்.
கதாநாயகிகளுக்கு சில கட்டாயங்கள் நெருக்கடிகள் உள்ளன. பல நிர்ப்பந்தங்களுக்கிடையில், கவர்ச்சியாக நடிக்க வேண்டும். ஆனால் ஆபாசமாக தெரியக்கூடாது அழகு காட்டவேண்டும். நினைத்த மாதிரி நடிக்க முடியாது. இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கூட நான் நடித்த படங்களில் நான் முழு திறமை காட்டியுள்ளேன்.
சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். தலை எழுத்தை மாற்ற முடியாது. ஒரு படம் ஹிட்டானால் வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும்.அப்படியொரு படத்துக்காகத்தான் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அப்படி வந்த ஒரு படம் சிவாஜி," என்றார்.