Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
100 குழந்தைகளின் உதடு பிளவு சிகிச்சைக்கு ஐஸ்வர்யா ராய் நிதியுதவி
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் பிளவு உதடுகள் உள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் உலக அழகி பட்டம் வென்று நேற்றுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை கொண்டாட முடிவு செய்தார் ஐஸ். மேலும் அவரது தந்தை கிருஷ்ணராஜ் ராயின் 76வது பிறந்தநாளையும் கொண்டாட திட்டமிட்டார்.
இரண்டையும் கொண்டாட அவர் ஸ்டார் ஹோட்டலுக்கு செல்லவில்லை மாறாக மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார்.
குழந்தைகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 50 முதல் 60 குழந்தைகளுடன் தனக்கு முக்கியமான நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
சிகிச்சை
ஐஸ்வர்யா தனது ஐஸ்வர்யா ராய் பவுன்டேஷன் மூலம் உதட்டு பிளவு கொண்ட 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளார்.
வயது
ஐஸ்வர்யா நிதியுதவி செய்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஒன்று முதல் 14 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை
ஐஸ்வர்யா ராயின் தந்தை தனது 76வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். முன்னதாக ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யாவின் 3வது பிறந்தநாளையொட்டி பாலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.