Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மாஜி காதலரின் பெயரை கையில் இருந்து அழித்த ஏமி ஜாக்சன்
மும்பை: ஏமி ஜாக்சன் தனது கையில் பச்சை குத்தியிருந்த முன்னாள் காதலரின் பெயரை அழித்துவிட்டார்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்துள்ள ஐ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் ஏமி ஜாக்சன். சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் ஏமி ஜாக்சன் நடித்திருந்தார். அப்போது அவருக்கும் சிம்பு கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
சில காலம் அவர்கள் ஜோடி போட்டு பல இடங்களுக்கு சென்றனர். காதலில் விழுந்த ஏமி தனது கையில் மேரா பியார், மேரா பிரதீக் என்று பச்சைக் குத்திக் கொண்டார். இந்நிலையில் ஏமியும், பிரதீக்கும் பிரிந்துவிட்டனர்.
இருப்பினும் ஏமி கையில் பச்சை மட்டும் அப்படியே இருந்து வந்தது. இந்நிலையில் அவர் அந்த பச்சையை அழித்துவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
என் கையில் இருந்த பச்சையை அழித்துவிட்டேன். இனி நான் பச்சையே குத்த மாட்டேன். அப்படியே பச்சை குத்துவது என்றாலும் பல முறை யோசிப்பேன் என்றார்.