Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னை கிண்டல் செய்த கோழைகள் தில் இருந்தா என் முன்னாடி வாங்க பார்ப்போம்: நடிகை அனுஷ்கா
மும்பை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை ட்விட்டரில் தவறாக குறிப்பிட்டதற்காக யார் தன்னை கிண்டல் செய்தாலும் கவலை இல்லை என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணம் அடைந்த செய்தியை அறிந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர் கலாமின் பெயரை ஏபிஜெ அப்துல் கலாம் ஆசாத் என்று தவறுதலாக குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த மக்கள் கலாம் பெயரை எப்படி தவறாக எழுதலாம் என்று கூறி ட்விட்டரில் அனுஷ்காவை கிண்டல் செய்தனர். இதையடுத்து அனுஷ்கா தனது ட்வீட்டில் ஆசாத் என்ற பெயரை நீக்கினார்.
இந்நிலையில் இது குறித்து அனுஷ்கா மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அது தெரியாமல் நடந்த தவறு. என்னை கிண்டல் செய்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. என் நோக்கம் சரியானது. கம்ப்யூட்டருக்கு பின்னால் அமர்ந்து கமெண்ட் போடுபவர்கள் கோழைகள், முகம் தெரியாதவர்கள். எங்கே அவர்கள் என் முகத்திற்கு எதிராக கிண்டல் செய்யட்டும் பார்க்கலாம் என்றார்.