Don't Miss!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- News மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம்.. எப்படி?
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
விஷாலும், ஆர்யாவும் சரியான லூசுப் பசங்க.. 'அத்தாச்சி' ஷ்ரேயா ரெட்டி தரும் 'அத்தாட்சி'!!
சென்னை: நடிகர்கள் விஷாலையும், ஆர்யாவையும் சரியான லூசுப் பசங்க என செல்லமாக விமர்சித்துள்ளார் நடிகை ஸ்ரேயா ரெட்டி.
திமிர் படத்தின் மூலம் ‘திமிர்' பிடித்த வில்லியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் என அடுத்தடுத்த படங்களில் தன் நடிப்புத் திறமையை நிரூபித்தவர்.
நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக உயர்ந்த நிலையில் திடீரென விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவைத் திருமணம் செய்து கொண்டு விஷாலுக்கு அண்ணி ஆகி விட்டார் ஸ்ரேயா ரெட்டி. இப்போது அண்டாவைக் காணோம் படம் மூலம் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்துள்ளார் இவர்.
இந்நிலையில், ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஆர்யா மற்றும் விஷாலின் திருமணம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்ரேயா ரெட்டி பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
லூசுப் பசங்க...
இண்டஸ்ட்ரில யார் மெண்டல்னு கேட்டீங்கன்னா, அது விஷாலும், ஆர்யாவும் தான். ஆர்யாவும், விஷாலும் லூசுப் பசங்க.
வேற கமிட்மெண்ட் வேணாமாம்...
சினிமா தவிர வேற எந்த கமிட்மெண்ட்டும் வேணாம்னு ஜாலியா திரியிறாங்க. ரெண்டு பசங்களும் சேர்ந்து பேச ஆரம்பிச்சா, கூட இருக்கறவங்க விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அந்த அளவுக்கு ரெண்டு பேருக்கும் சென்ஸ் ஆப் ஹியூமர் ஜாஸ்தி.
எப்பப்பா கல்யாணம்...
விஷால் அம்மா ஆர்யாவை எப்பப் பார்த்தாலும், ‘ஏம்பா... எப்பப்பா நீ கல்யாணம் பண்ணிக்கப் போற? நீ கல்யாணம் பண்ண பிறகு தான் என் மகன் கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லிட்டே இருக்கான்'னு கேட்பாங்க.
ஒரே ஓட்டம் தான்...
அதனால விஷால் அம்மாவைப் பார்த்தாலே ஆர்யா ஓடிருவான்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.