Don't Miss!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஷாலும், ஆர்யாவும் சரியான லூசுப் பசங்க.. 'அத்தாச்சி' ஷ்ரேயா ரெட்டி தரும் 'அத்தாட்சி'!!
சென்னை: நடிகர்கள் விஷாலையும், ஆர்யாவையும் சரியான லூசுப் பசங்க என செல்லமாக விமர்சித்துள்ளார் நடிகை ஸ்ரேயா ரெட்டி.
திமிர் படத்தின் மூலம் ‘திமிர்' பிடித்த வில்லியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் என அடுத்தடுத்த படங்களில் தன் நடிப்புத் திறமையை நிரூபித்தவர்.
நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக உயர்ந்த நிலையில் திடீரென விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவைத் திருமணம் செய்து கொண்டு விஷாலுக்கு அண்ணி ஆகி விட்டார் ஸ்ரேயா ரெட்டி. இப்போது அண்டாவைக் காணோம் படம் மூலம் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்துள்ளார் இவர்.
இந்நிலையில், ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஆர்யா மற்றும் விஷாலின் திருமணம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்ரேயா ரெட்டி பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
லூசுப் பசங்க...
இண்டஸ்ட்ரில யார் மெண்டல்னு கேட்டீங்கன்னா, அது விஷாலும், ஆர்யாவும் தான். ஆர்யாவும், விஷாலும் லூசுப் பசங்க.
வேற கமிட்மெண்ட் வேணாமாம்...
சினிமா தவிர வேற எந்த கமிட்மெண்ட்டும் வேணாம்னு ஜாலியா திரியிறாங்க. ரெண்டு பசங்களும் சேர்ந்து பேச ஆரம்பிச்சா, கூட இருக்கறவங்க விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அந்த அளவுக்கு ரெண்டு பேருக்கும் சென்ஸ் ஆப் ஹியூமர் ஜாஸ்தி.
எப்பப்பா கல்யாணம்...
விஷால் அம்மா ஆர்யாவை எப்பப் பார்த்தாலும், ‘ஏம்பா... எப்பப்பா நீ கல்யாணம் பண்ணிக்கப் போற? நீ கல்யாணம் பண்ண பிறகு தான் என் மகன் கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லிட்டே இருக்கான்'னு கேட்பாங்க.
ஒரே ஓட்டம் தான்...
அதனால விஷால் அம்மாவைப் பார்த்தாலே ஆர்யா ஓடிருவான்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.