Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஸ்ரேயாவைக் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கடிதம் வாங்கிய படக்குழு!
சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்ட ஸ்ரேயாவின் நிலை இப்போது மோசம். பாபநாசம் ஹிந்தி ரீமேக்கில் அம்மா கேரக்டரில் நடித்தவர் இப்போது சிம்புவுக்கும் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி வருகின்ற வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஸ்ரேயா தெலுங்கில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக கவுதமி புத்ர சடர்கனி என்ற படத்தில் நடிக்கிறார். பாலகிருஷ்ணாவுக்கு ஸ்ரேயாவின் தாத்தா வயது.
பரபரப்புக்காக எதையாவது பேசிக்கொண்டும் செய்துகொண்டும் இருக்கும் ஸ்ரேயா இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த ஸ்டில்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். இன்னும் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக்கே வராத நிலையில் காட்சிகளின் ஸ்டில்கள் வந்ததால் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லோருக்குமே டென்ஷன்.
ஸ்ரேயாவைக் கண்டித்த படக்குழு 'இனி இப்படி செய்ய மாட்டேன்' என்று பள்ளி மாணவி கணக்காக மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியிருக்கிறது. இந்த கடிதம் எழுதி வாங்கும்போது பாலகிருஷ்ணாவும் உடன் இருந்திருக்கிறார்!