Don't Miss!
- News Exclusive: நான் சாதி வெறியன் இல்லை.. அது பொய் வீடியோ! கொமதேக நாமக்கல் வேட்பாளர் சூரியமூர்த்தி பேட்டி
- Lifestyle புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பாவனாவிடம் மாதிரி என்னிடம் யாராவது வாலாட்டினால் கொன்னே போட்டுடுவேன்: சூர்யா நாயகி ஆவேசம்
ஹைதராபாத்: நடிகை பாவனாவுக்கு நடந்தது போன்று தன்னிடம் யாராவது தவறாக நடந்திருந்தால் அவர்களை கொலை செய்திருப்பேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் ராகுல் ப்ரீத் சிங்.
மகேஷ் பாபு முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் தான் நாயகி. மேலும் செல்வராகவன் சூர்யாவை வைத்து இயக்கும் படத்திலும் ராகுலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்நிலையில் பாவனாவுக்கு நடந்த கொடுமை பற்றி ராகுல் ப்ரீத் சிங் கூறுகையில்,
அதிர்ச்சி
நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமை குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற செயல்களை செய்பவர்கள் மனிதர்களே கிடையாது. இது ஒரு வெட்கம்கெட்ட செயல் ஆகும்.
கொலை தான்
பாவனா இடத்தில் நான் இருந்து யாராவது என்னை மானபங்கம் செய்தால் அவர்களை கொலை செய்திருப்பேன். நான் ஒரு தடகள வீராங்கனை. எப்பவும் ஃபிட்டாக இருப்பவள்.
ஜிம்
படப்பிடிப்பில் நான் பிசியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சும்மா உட்காராமல் நேராக ஜிம்முக்கு சென்றுவிடுவேன். ஃபிட்டாக இருப்பது எனக்கு மிகவும் முக்கியம்.
அம்மா
நான் வெளியே கிளம்பினால் பார்த்துப் போ என்று அம்மா சொல்வார்கள். காரில் டிரைவர் இருக்கிறார் அப்புறம் என்ன என்று நினைப்பேன். பாவனா சம்பவத்திற்கு பிறகு யாரை நம்புவது, நம்பக் கூடாது என்று தெரியவில்லை என்று ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.