twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் இடையே மீண்டும் சண்டை

    By Siva
    |

    மும்பை: பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    பாலிவுட் நடிகைகளில் பிரியங்கா சோப்ராவுக்கும், கரீனா கபூருக்கும் ஆகவே ஆகாது. அவர்கள் அவ்வப்போது சண்டை போடுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    அவர்களின் சண்டை வரலாற்றை பார்ப்போம்,

    தோழிகள்

    தோழிகள்

    அய்த்ராஸ் படத்தில் நடிக்கையில் பிரியங்காவும், கரீனாவும் தோழிகளாக இருந்தனர். பின்னர் பிரியங்கா பெரிய ஸ்டார் ஆன பிறகு அவரிடம் இருந்து தள்ளி இருந்தார் கரீனா.

    சண்டை

    சண்டை

    நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றபோது கரீனாவுக்கும், பிரியங்காவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் அடிக்கப் பாய்ந்தனர்.

    பிரியங்கா

    பிரியங்கா

    பிரியங்கா வெளிநாட்டில் படித்தவர் என்பதால் அவரது ஆங்கிலம் வித்தியாசமாக இருக்கும். அதை கரீனா கிண்டலடித்தார். பதிலுக்கு பிரியங்கா கரீனாவின் காதலர் சைப் அலி கானுக்கு எங்கிருந்து ஆக்சென்ட் வந்ததோ தனக்கும் அங்கிருந்தே வந்தது என்றார்.

    கரீனா

    கரீனா

    பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், ஷாஹித் கபூர், கரீனா ஆகியோரின் கம்ப்யூட்டர்களில் இருந்து எதை திருட விரும்புகிறீர்கள் என்று பேட்டியில் பிரியங்காவிடம் கேட்டதற்கு கரீனாவிடம் முதலில் கம்ப்யூட்டர் இருக்கிறதா என்று நக்கலாக கேட்டார்.

    காதலன்

    காதலன்

    கரீனா காதலித்த ஷாஹித் கபூர் பிரியங்காவை காதலித்தார். பிரியங்காவும், ஷாஹித்தும் சேர்வதும், பிரிவதுமாக உள்ளனர். ஷாஹிதும் பிரியங்கா, கரீனா இடையே பிரச்சனை ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.

    மேரி கோம்

    மேரி கோம்

    மேரி கோம் படம் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளது. ஹீரோவால் ரூ.100 கோடி வசூல் வரும் படத்தில் நடித்துக் கொண்டு நான் எல்லாம் ரூ.100 கோடி ஹீரோயின்கள் என்று எதற்காக நடிகைகள் கூற வேண்டும் என பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடின உழைப்பு

    கடின உழைப்பு

    எந்த படத்தில் நடித்தாலும் அது நம் படம். ஹீரோயின் இல்லாமல் ஹீரோ இல்லை. நான் ரூ.100 கோடி வசூல் செய்த படங்களில் நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். அதன் வெற்றிக்கு அனைவரும் பாடுபட்டுள்ளோம். அப்படி இருக்கையில் அதை நம் படம் என்று கூறுவதில் என்ன தவறு என கரீனா கேட்டுள்ளார்.

    Read more about: priyanka chopra kareena kapoor
    English summary
    Priyanka Chopra and Kareena Kapoor have turned foes again.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X